உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

எலி மருந்து தின்று பெண் தற்கொலை

Published On 2022-02-10 10:38 IST   |   Update On 2022-02-10 10:38:00 IST
வில்லியனூரில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

வில்லியனூர் கணுவாய்பேட்டை புதுநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கெஜ லட்சுமி (வயது45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக கழுத்து வலியால் அவதிபட்டு வந்தார்.

இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் கழுத்து வலி தீரவில்லை. இதனால் கெஜலட்சுமி மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கழுத்து வலி அதிகமானதால் மனமுடைந்த கெஜலட்சுமி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். மாலையில் வேலை முடிந்து ராஜி வீட்டுக்கு வந்த போது மனைவி எலி மருந்து தின்று மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் ராஜி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கெஜலட்சுமி சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கெஜலட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து ராஜி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News