உள்ளூர் செய்திகள்
கைது

பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

Published On 2022-02-09 16:23 IST   |   Update On 2022-02-09 16:23:00 IST
காரைக்கால் அருகே பொது இடத்தில் நின்று பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்:

காரைக்கால் அருகே கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமுருகு மற்றும் போலீசார், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வரிச்சிக்குடி வ.உ.சி நகர் அருகே திரு.பட்டினம் கீழையூரை சேர்ந்த கண்ணன் (வயது 35) பொது இடத்தில் நின்று, பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிகொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், காசாகுடி கம்பன் நகர் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேலகாசாகுடியை சேர்ந்த சற்குண பெருமாள்(42), பொது இடத்தில் நின்று, பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசினார். போலீசார் அவரையும் கைது செய்தனர்.

Similar News