உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2022-02-09 14:19 IST   |   Update On 2022-02-09 14:19:00 IST
கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில்   2 ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 135, காரைக்காலில் 33, ஏனாமில் 24, மாகியில் 6 பேர் புதிதாக  தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவையில் 49, காரைக் காலில் 17, ஏனாமில் 5, மாகியில் 3 பேர் என 74 பேர் தொற்றுடன்  மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 379, காரைக்காலில் 104, ஏனாமில் 51, மாகியில் 4 பேர் என 538 பேர்
சிகிச்சையில் குணமடைந் தனர். 

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 760 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 719 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

புதுவையில் ஆயிரத்து 975, காரைக்காலில்  868, ஏனாமில் 142, மாகியில் 27 பேர் என 3 ஆயிரத்து 12 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர்.  புதுவை மாநிலத்தில் இப்போது 3 ஆயிரத்து 86 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை சாந்தி நகரை சேர்ந்த 81 வயது முதியவர், மாகியை சேர்ந்த 85 வயது மூதாட்டி என 2 பேர் கொரோனா சிகிச்சை  பலனின்றி இறந்தனர். 
இதனால் மாநிலத்தில்  கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 955 ஆக உயர்ந்துள்ளது. 

புதுவையில்  2-வது தவணை உட்பட 15 லட்சத்து 50 ஆயிரத்து 93 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Similar News