உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஜவுளிக்கடையில் கொள்ளை

Published On 2022-02-09 10:35 IST   |   Update On 2022-02-09 10:35:00 IST
பிரபல ஜவுளிக்கடையில் மேல்தளத்தின் வழியாக உள்ளே நுழைந்து மர்மநபர் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை நேரு வீதியில் பிரபல ஜவுளி கடை  ஒன்று இயங்கி வருகிறது. 3 தளங்கள் உடைய ஜவுளிக்கடையில் ஆண்கள்-பெண்கள் என 40 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஜவுளிக்கடையின் மானேஜராக செந்தில்குமார் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில்  வழக்கம் போல் வேலை முடிந்ததும் ஜவுளிக்கடையை மூடிவிட்டு சென்றனர்.  பின்னர் மானேஜர் மற்றும் ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த மேஜை திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மானேஜர் செந்தில்குமார் மேஜையை திறந்து பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ-.1.70 லட்சம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார்.

பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ நடந்த கடையை ஆய்வு செய்தனர். 

3 தளங்களுடைய இந்த கடையின் மேல்தளத்தில் இருந்து லிப்ட் வழியாக மர்மநபர் கடையின் உள்ளே புகுந்து மேஜையில் இருந்த பணத்தை கொள்ளைடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

ஜவுளிக்கடையில் கண்காணிப்பு கேமிரா வசதி இருந்தும் பணிமுடிந்து செல்லும் போது ஊழியர்கள் கேமிராவை ஆப் செய்து விட்டு சென்றுள்ளனர். இருந்த போதிலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.

Similar News