உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
காரைக்காலில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் கோவில் பத்து தென்றல் நகரில் வசிப்பவர் அய்யப்பன். பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அகல்யா (வயது 18) காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
வழக்கம் போல் அகல்யா கடந்த 4-ந்தேதி கல்லூரிக்கு சென்றார். அன்று மாலை வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த அய்யப்பன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அகல்யாவை காணவில்லை.
இதுகுறித்து அய்யப்பன் காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி அகல்யா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்கால் கோவில் பத்து தென்றல் நகரில் வசிப்பவர் அய்யப்பன். பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அகல்யா (வயது 18) காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
வழக்கம் போல் அகல்யா கடந்த 4-ந்தேதி கல்லூரிக்கு சென்றார். அன்று மாலை வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த அய்யப்பன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அகல்யாவை காணவில்லை.
இதுகுறித்து அய்யப்பன் காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி அகல்யா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.