உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

17 வயது சிறுமியை மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2022-02-08 14:47 IST   |   Update On 2022-02-08 14:47:00 IST
பாலியல் சம்பவத்துக்கு உடன்படாததால் 17 வயது சிறுமியை மிரட்டிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
புதுச்சேரி:

சென்னையை துரைபாக்கம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த சில  வருடங்களாக முதலியார்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்கள்.  இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் 9-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். 

இதற்கிடையே தம்பதியர் சொந்த ஊருக்கு செல்லும் போது தங்களது மகளையும் அழைத்துசெல்வார்கள். அப்போது அதே பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி பிரவீன்குமார்(19) என்பவர் அந்த சிறுமியிடம் பழகி வந்துள்ளார்.

அப்போது தனிமையில் பேசும் போது தன்னிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு அந்த சிறுமியிடம் அடிக்கடி வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு அந்த சிறுமி உடன்படாமல் மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் தன்னுடன் சிறுமி நெருக்கமாக இருந்த புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.

தொடர்ந்து இதுபோன்று சிறுமியிடம் செல்போனில் பேசி பிரவீன்குமார் மிரட்டி வந்ததால் இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் முறையிட்டார். 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பிரவீன்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News