உள்ளூர் செய்திகள்
கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி கார் உடைப்பு

Published On 2022-02-08 14:35 IST   |   Update On 2022-02-08 14:35:00 IST
கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி கார் உடைப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான நாவற்குளம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சரத்செந்தில் (வயது38). 

இவர் சமத்துவ மக்கள் கட்சியின் புதுவை மாநிலத் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் வசித்து வரும் புதுவை-தமிழக எல்லையில் உள்ள நாவற்குளம் பகுதியில் ரவுடிகள் நடமாட்டமும், 
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிகப்படியாக விற்கப்படுவதாக சரத் செந்தில் அடிக்கடி போலீசாரிடமும் சமூக வலைதளம் மூலமும் புகார் அளித்து வந்தார். 

இந்த நிலையில்  சரத்செந்தில் தனது வீட்டின் வாசலில் காரை நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் காரின் முன்பக்க கண்ணாடி உடைத்துவிட்டு சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரத் செந்தில் இதுகுறித்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருளுக்கு எதிராக சமூக அக்கறை யோடு சரத்செந்தில் செயல்படுவதால் சமூகவிரோதிகள் அவரது காரை அடித்து சேதப்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Similar News