உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் மனைவி பிரிந்ததால் வாலிபர் தற்கொலை
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மனைவி பிரிந்ததால் மனவேதனை அடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் காஜியார் வீதியைச்சேர்ந்தவர் முகம்மது ஆசிக் அம்ஜா (வயது36). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2021-ம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது. இதனால், மனம் உடைந்து போன இவர், சென்னையில் தங்கி சில மாதங்கள் வேலை செய்து வந்தார். பின்னர் மீண்டும் காரைக்கால் வந்து விட்டார்.
காரைக்காலில் வேலை எதுவும் செய்யாமல், தினமும் மது குடித்து வந்தார். இந்த நிலையில் திருவாரூரில் உள்ள தனது பெற்றோரை பார்த்துவிட்டு காரைக்கால் வந்த அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி காரைக்கால் பஸ் நிலையம் அருகே மயங்கி விழுந்துள்ளார்.
தகவல் அறிந்த அவரது உறவினர் அப்துல்கரீம், அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், முகம்மது ஆசிக் அம்ஜா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, காரைக்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் காஜியார் வீதியைச்சேர்ந்தவர் முகம்மது ஆசிக் அம்ஜா (வயது36). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2021-ம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது. இதனால், மனம் உடைந்து போன இவர், சென்னையில் தங்கி சில மாதங்கள் வேலை செய்து வந்தார். பின்னர் மீண்டும் காரைக்கால் வந்து விட்டார்.
காரைக்காலில் வேலை எதுவும் செய்யாமல், தினமும் மது குடித்து வந்தார். இந்த நிலையில் திருவாரூரில் உள்ள தனது பெற்றோரை பார்த்துவிட்டு காரைக்கால் வந்த அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி காரைக்கால் பஸ் நிலையம் அருகே மயங்கி விழுந்துள்ளார்.
தகவல் அறிந்த அவரது உறவினர் அப்துல்கரீம், அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், முகம்மது ஆசிக் அம்ஜா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, காரைக்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.