உள்ளூர் செய்திகள்
கவர்னர் தமிழிசை குடியரசு தின வாழ்த்து
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி:
இந்திய குடியரசு தினம், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய நன்நாள் ஆகும். புதுவை மக்களுக்கும், இந்தியக் குடிமக்கள் அனை வருக்கும் நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு எனது குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்முடைய தேசியத் தலைவர்கள் முன்னெடுத்துக் கொடுத்த இறையாண்மை, பொதுவுடமை, மதச் சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை பேணிப்பாதுகாக்கவும்- இந்திய அரசியலமைப்புச் சாசனம் வகுத்துக் கொடுத்த ஜனநாயக கடமைகளை உணர்ந்து பொறுப்புள்ள குடிமக்க ளாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த நாளில் நாம் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.