உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ரோடியர் மில் எந்திரங்கள் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணை : முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-01-23 09:52 IST   |   Update On 2022-01-23 09:52:00 IST
புதுவை ரோடியர் மில் எந்திரங்கள் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரோடியர் மில்லை நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கவர்னர் கூறியதை கேட்டு மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆனால் அந்த மில்லில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

புதுவையின் அடையாள மாக திகழ்வதுடன் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அளித்த இந்த மில்லின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.

கூட்டு சதியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

குற்றவாளிகள் யாரையும் தப்பிக்க விடக்கூடாது. எனவே இந்த கொள்ளையின் உண்மை நிலையை அறிந்து குற்றவாளிகளை தண்டிக்க அரசு உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கொள்ளையடித்த பொருட்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் இந்த மில்லோடு மீதி இருக்கும் 4 ஜவுளி ஆலைகளையும் ஒருங்கிணைத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் வகையில் மில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறி உள்ளார். 

Similar News