உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வீடுகளை சூறையாடிய 6 பேர் கைது

Published On 2022-01-22 12:50 IST   |   Update On 2022-01-22 12:50:00 IST
கருவடிக்குப்பத்தில் கோஷ்டி மோதலில் வீடுகளை சூறையாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி: 

புதுவை லாஸ்பேட்டை கருவடிகுப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா என்ற கேப் சூர்யா. 

இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த எல்லாடை என்ற அருணுக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது கோஷ்டி மோதலாக மாறியது.  இதில் இருதரப்பை சேர்ந்த  2 பேரின் வீடுகள் சூறையாடப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் இருதரப்பை சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் வீடுகளை சூறையாடியதாக இரு தரப்பை சேர்ந்த சூர்யா, புஷ்பராஜ், பச்சைகிளி என்ற பிரதாப், பொரி மற்றும் எல்லடை அருண், பழனி  ஆகிய 6 கைது செய்தனர். மற்ற 6  பேரை தேடி வருகிறார்கள்.

Similar News