செய்திகள்
கோப்புப்படம்

விவசாயிகள் கிஷான் கடன் அட்டைகள் பெற விண்ணப்பிக்கலாம்- திருச்சி கலெக்டர் சிவராசு தகவல்

Published On 2021-11-27 11:57 GMT   |   Update On 2021-11-27 11:57 GMT
திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிஷான்அட்டைகள் பெற உரிய விண்ணப்பத்தினை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் வருகின்ற 15.2.2022க்குள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி:

கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் கிஷான் கடன் அட்டைகள் வழங்கிட நிலையான இயக்க செயல்முறைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு அவர்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஷான் கடன் அட்டைகள் வழங்கிட, கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வருகிற 15.2.22வரை பெறப்படவுள்ளது.

அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிஷான்அட்டைகள் பெற உரிய விண்ணப்பத்தினை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் வருகின்ற 15.2.2022க்குள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News