செய்திகள்
வழக்கு பதிவு

கோவை மாணவி தற்கொலை- பேனர் வைத்த 3 பேர் மீது வழக்கு

Published On 2021-11-17 09:55 GMT   |   Update On 2021-11-17 09:55 GMT
கோவை பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர் வைத்ததாக கவுதம் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை:

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மாணவி சாவுக்கு நீதி கேட்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர் வைத்ததாக கவுதம் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல உக்கடம் பெருமாள் கோவில் வீதி பகுதியிலும், ஈஸ்வரன் கோவில் வீதி பகுதியிலும் மாணவி சாவுக்கு நீதி கேட்டு பேனர் வைத்ததாக தமிழ்நாடு ஆரிய வைசிய சங்கம் மீது உக்கடம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாணவியின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News