புதுவையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் - கோவில் திருவிழா நடத்த அனுமதி
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கடைகளை இரவு 11 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களில் இரவு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் புதுவையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 15-ந் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் இரவு11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்...கூட்டமான இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவு அமைப்புகள் எச்சரிக்கை