செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 28 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 42 ஆயிரத்து 633 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 315 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக உள்ளது.