செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஜெயங்கொண்டம் அருகே ஆசை வார்த்தை சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழுதுடையான் கிராமத்தை சேர்ந்த தியாகராஜனின் மகன் பிரகாஷ்(வயது 27). கூலித்தொழிலாளியான இவர், 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமானார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா, ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் பிரகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.