செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-08-24 04:11 GMT   |   Update On 2021-08-24 04:11 GMT
வில்லியனூர் அருகே கத்தியால் கழுத்து-கையை அறுத்து மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

ஆந்திர மாநிலம் ராமச்சந்திராபுரம்மேடக் அசோக்நகரை சேர்ந்தவர் சத்தியநாராயணா. இவரது மகள் ஸ்பண்டனா (வயது30). இவர் வில்லியனூர் அருகே அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி முதுகலை மருத்துவம் (எம்.டி). 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஸ்பண்டனா சொந்த ஊருக்கு சென்ற போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு திரும்பினார். அதுமுதல் ஸ்பண்டனா சோர்வாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்பண்டனா பக்கத்து அறையில் தங்கியிருக்கும் தனது தோழி தரணியாவை சந்தித்து பேசி விட்டு விடுதி அறைக்கு சென்றார். நேற்று மதியம் 3.30 மணி வரை ஸ்பண்டனா தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த விடுதி வார்டன் மற்றும் ஊழியர்கள் ஸ்பண்டனா தங்கியிருந்த அறை கதவை தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை. அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து அறை கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் துப்பட்டாவால் ஸ்பண்டனா தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு விடுதி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

ஸ்பண்டனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கத்தியால் கழுத்து மற்றும் கையை அறுத்துள்ளார். இதில் ரத்தம் வெளியேறி இருந்தது.

இதுகுறித்து விடுதி வார்டன் டாக்டர் லதா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து மாணவி ஸ்பண்டனா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி ஸ்பண்டனா தற்கொலை குறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் புதுவை விரைந்துள்ளனர்.
Tags:    

Similar News