செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்று இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த திலீப் குமார் (வயது 20), கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.