செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 22 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை 41 ஆயிரத்து 590 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 40 ஆயிரத்து 937 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 329 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உள்ளது.