செய்திகள்
தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை

Published On 2021-08-10 19:52 IST   |   Update On 2021-08-10 19:52:00 IST
கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி விருதன்கொட்டாய் அருகே உள்ள பெத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கு மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த சரவணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News