செய்திகள்
மரணம்

மத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி

Published On 2021-08-08 15:09 IST   |   Update On 2021-08-08 15:09:00 IST
மத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

மத்தூரை அடுத்த சாளூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மனைவி சின்னக்குழந்தை (வயது50). சம்பவத்தன்று இவர் விவசாய நிலத்திற்கு சென்ற போது அவரது காலில் பாம்பு கடித்து விட்டது. இதில் மயங்கி விழுந்த சின்னக்குழந்தையை குடும்பத்தினர் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News