செய்திகள்
திருட்டு

கடை முன்பு வைத்திருந்த ஜெனரேட்டர் திருட்டு

Published On 2021-07-14 21:47 GMT   |   Update On 2021-07-14 21:47 GMT
கடை முன்பு வைத்திருந்த ஜெனரேட்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி பாக்குமுடையான்பேட் மகாத்மா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 52). கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் பங்க் எதிரே சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஜெனரேட்டரை கடைக்கு வெளியே வைத்திருந்தார். சம்பவத்தன்று மர்ம நபர்கள் ஜெனரேட்டரை திருடிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் லாஸ்பேட்டை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News