செய்திகள்
ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே ஜூஜூ வாடி செந்தில் நகரை சேர்ந்தவர் சென்னப்பா (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.