செய்திகள்
ஓசூர் அருகே ரெயில் மோதி வாலிபர் பலி
ஓசூர் அருகே ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அன்னை நகர் பக்கமுள்ள ரெயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் நேற்று பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் அஞ்செட்டி அருகே மிட்டதார்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.