செய்திகள்
திருட்டு

கிருஷ்ணகிரி அருகே சரக்கு வேன் திருட்டு

Published On 2021-07-10 17:57 IST   |   Update On 2021-07-10 17:57:00 IST
கிருஷ்ணகிரி அருகே சரக்கு வேன் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்தி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 62). இவர் அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மளிகை பொருட்களை வாங்கி வருவதற்கு, சொந்தமாக சரக்கு வேன் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் மளிகை கடை முன்பு சரக்கு வேனை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை பார்த்த போது சரக்கு வேன் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து முனிரத்தினம் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News