செய்திகள்
அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி போலீசார் தொட்டள்ளா ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கொடிபாளையம் மாதேஷ் என்கிற தென்றல் மாதேஷ் (வயது 40), தேவன் தொட்டி ருத்ர மாதைய்யா (31), ஸ்ரீ கந்தப்பா (42), மாதேவன் (41), கிருஷ்ணன் (35) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.