செய்திகள்
விபத்து பலி

கிருஷ்ணகிரி அருகே மொபட் கவிழ்ந்து பெண் பலி

Published On 2021-07-09 17:48 IST   |   Update On 2021-07-09 17:48:00 IST
கிருஷ்ணகிரி அருகே மொபட் கவிழ்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாது (வயது 45). இவர், கணவர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பழைய பேயனப்பள்ளி அருகே சென்ற போது திடீரென நிலைதடுமாறி மொபட் கவிழ்ந்தது. இதில் மாது பலத்த காயம் அடைந்தார். கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாது சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News