செய்திகள்
கொரோனா தடுப்பூசி

திருநகரி, திருவாலி ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-05 21:47 IST   |   Update On 2021-06-05 21:47:00 IST
திருவெண்காடு அருகே உள்ள திருநகரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
திருவெண்காடு:

திருவெண்காடு அருகே உள்ள திருநகரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் இளம்பிறை, சுகாதாரஆய்வாளர் ரங்கராஜன், வார்டு உறுப்பினர்கள் வெங்கடேசன், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 287 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் திருவாலி ஊராட்சியில் நடந்த தடுப்பூசி முகாமை ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி திருமாறன் தொடங்கி வைத்தார். முகாமில் 212 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஊராட்சி சார்பில் முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது. முகாமை ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News