செய்திகள்
மயிலாடுதுறை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது
மயிலாடுதுறை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே செருதியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). இவர் வீட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜன் வீட்டை சோதனையிட்டனர். சோதனையில் சாராய ஊறல் போட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து 25 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.