செய்திகள்
சீர்காழி அருகே ஊராட்சி தலைவர் வீடு தீ விபத்தில் நாசம்
சீர்காழி அருகே ஊராட்சி தலைவர் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலங்காடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் சுந்தரம்பாள்தேவேந்திரன் (35). இவரின் குடிசை வீடு மின்கசிவால் எரிந்து சேதமானது. சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இதில் வீட்டுக்குள் வைத்திருந்த 8 மூட்டை விதை நெல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்துக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, மற்றும் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் நேரில் சென்று நிவாரண உதவி வழங்கினர்.