செய்திகள்
திட்டச்சேரியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
திட்டச்சேரியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, முககவசம் வழங்கப்பட்டது.
திட்டச்சேரி:
திட்டச்சேரியில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பரமநாதன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, முககவசம் வழங்கப்பட்டது.