செய்திகள்
கொரோனா வைரஸ்

காஞ்சிபுரத்தில் 248 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-04-17 14:19 GMT   |   Update On 2021-04-17 14:19 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 248 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,238-ஆக உள்ளது.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,80,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,02,022 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,071-ஆக அதிகரித்துள்ளது. 
 
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,80,184 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 248 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,238-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 31,004 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 476 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News