செய்திகள்
கோப்பு படம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலி

Published On 2021-04-13 14:40 GMT   |   Update On 2021-04-13 14:40 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 611 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 611 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சைப் பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 846 ஆக உயர்ந்தது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 277 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 467 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 333 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 48 ஆயிரத்து 548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 725 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்து உள்ளனர்.
Tags:    

Similar News