செய்திகள்
தாக்குதல்

ராயக்கோட்டை அருகே முன்விரோதத்தில் அண்ணன், தம்பிகள் மீது தாக்குதல்

Published On 2021-04-07 15:05 GMT   |   Update On 2021-04-07 15:05 GMT
ராயக்கோட்டை அருகே முன்விரோதத்தில் அண்ணன், தம்பிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). இவரது தம்பிகள் கரண்ராஜ் (27), ஆனந்தன் (26). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த நடேசன், ரமேஷ், சத்யராஜ் ஆகியோருக்கும் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வராஜ், கரண்ராஜ், ஆனந்தன் ஆகிய 3 பேரையும் நடேசன் தரப்பினர் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News