செய்திகள்
வெங்கம்பாக்கம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
வெங்கம்பாக்கம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம், திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சேகர். இவர், சேலையூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மகரஜோதி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், மகரஜோதியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர். இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.