வில்லியனூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளி மாயம்
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே அரியூர் மகாலட்சுமி நகர் அனந்தபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜாபர்சேட் (வயது50). இவர் புதிதாக வீடு கட்டி வருவதால் கடன் சுமை ஏற்பட்டது.
சம்பவத்தன்று இதுதொடர்பாக இவருக்கும் இவரது மகன் மீரானுக்கும் (26) வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தடுமாறி விழுந்த ஜாபர்சேட் தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி ஜாபர்சேட் டீ குடித்து விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் ஆஸ்பத்திரிக்கு திரும்பவில்லை. வீட்டுக்கும் செல்லவில்லை.
உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ஜாபர்சேட் இல்லை. இதையடுத்து அவரது மனைவி ஆமீனா பேகம் தனது கணவர் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ஜாபர்சேட்டை தேடி வருகிறார்கள்.