செய்திகள்
விபத்து பலி

வண்டலூர் அருகே கார் மோதி மூதாட்டி பலி

Published On 2021-03-01 10:33 GMT   |   Update On 2021-03-01 10:33 GMT
வண்டலூர் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 72), ஆர்.எம்.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் துளசி (வயது 62), இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வண்டலூர் மேம்பாலம் கீழ் பகுதியில் சாலையை கடக்கும்போது அந்த வழியாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவர் மீதும் பயங்கரமாக மோதியது.‌ இதில் தூக்கி வீசப்பட்ட ராணி, துளசி இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி பரிதாபமாக இறந்தார். துளசி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News