செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 780 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 780 பேர் உயிரிழந்துள்ளனர். 336 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 603 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 780 பேர் உயிரிழந்துள்ளனர். 336 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 524 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 447 பேர் உயிரிழந்துள்ளனர். 71 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.