செய்திகள்
சிவகாசி அருகே மற்றொரு பட்டாசு ஆலையிலும் வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
ஒரேநாளில் அடுத்தடுத்து நடந்த வெடி விபத்து சிவகாசி பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி:
சிவகாசி அருகே வி.சொக்கலிங்காபுரத்தில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நேற்று இரவு இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் தீமளமளவென பற்றி எரிந்தது. இதில் 3 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. 3 அறைகள் பலத்த சேதமடைந்தன.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இரவு நேரம் இந்த விபத்து நடந்ததால் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஒரேநாளில் அடுத்தடுத்து நடந்த வெடி விபத்து சிவகாசி பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி அருகே வி.சொக்கலிங்காபுரத்தில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நேற்று இரவு இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் தீமளமளவென பற்றி எரிந்தது. இதில் 3 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. 3 அறைகள் பலத்த சேதமடைந்தன.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இரவு நேரம் இந்த விபத்து நடந்ததால் தொழிலாளர்கள் யாரும் அங்கு இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
ஒரேநாளில் அடுத்தடுத்து நடந்த வெடி விபத்து சிவகாசி பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.