செய்திகள்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்கநாதாபுரத்தைச் சேர்ந்த காளியப்பன்(வயது 32) சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் வெடிவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்கநாதாபுரத்தைச் சேர்ந்த காளியப்பன்(வயது 32) சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் வெடிவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.