செய்திகள்
விபத்து பலி

காரைக்கால் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

Published On 2021-02-09 11:20 GMT   |   Update On 2021-02-09 11:20 GMT
காரைக்கால் அருகே நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
காரைக்கால்:

காரைக்கால் அருகே திருநள்ளாறு பேட்டை மணல்மேட்டு தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் தினேஷ் (வயது26). இவரது நண்பர் பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் மதுபாலன் (26). இருவரும் நேற்று முன்தினம் இரவு பேட்டை பகுதியில் இருந்து திருநள்ளாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்டினார்.

காரைக்கால் அருகே விழிதியூர் சாலை பேட்டை சங்கரன்தோப்பு பகுதியில் சென்றபோது அதே வழியாக சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்றை கடக்கும் போது, மண் சறுக்கியதில் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் தினேஷ் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தினேசை திருநள்ளாறு சமுதாய நலவழிமையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மதுபாலன் லேசான காயத்துடன் தப்பினார். இதுதொடர்பாக மதுபாலன் கொடுத்த புகாரின் பேரில், டிராக்டர் டிரைவர் பேட்டை தோப்பு தெருவைச்சேர்ந்த பரமசிவம் மகன் ராஜமூர்த்தி (31) மீது, திருமலைராயன்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News