செய்திகள்
அந்தியூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
அந்தியூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பாலக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 35). கூலித்தொழிலாளி. சவுந்தரராஜன் கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு் வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சவுந்தரராஜன், விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுந்தரராஜன் இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.