செய்திகள்
ஜெயில் தண்டனை

கோபி அருகே பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு ஜெயில்

Published On 2021-02-04 02:33 GMT   |   Update On 2021-02-04 02:33 GMT
கோபி அருகே பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோபி:

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி கண்ணாடிப்புதூரை சேர்ந்தவர் பானுமதி. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி மர்ம நபர் ஒருவர் பானுமதியின் வீட்டுக்குள் நுழைந்து அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தார்கள். விசாரணையில் பானுமதியின் நகையை பறித்தது திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த நடராஜ் என்பவா் என்று தெரிந்தது.

இதைத்தொடர்ந்து நடராஜை போலீசார் கைது செய்து கோபி குற்றவியல் 2-வது நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன் நடராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Tags:    

Similar News