செய்திகள்
சிறை தண்டனை விதிக்கப்பட்ட எல்லப்பா.

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை

Published On 2021-01-30 12:20 GMT   |   Update On 2021-01-30 12:20 GMT
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெலத்தூர் பக்கமுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமியை ஒசஹள்ளி சோம்புறா கேட்டை சேர்ந்த முனிசாமியப்பா என்பவரின் மகன் எல்லப்பா (21) என்பவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் 29.10.2017 அன்று நடந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து வாலிபர் எல்லப்பாவை கைது செய்தார். அவர் மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட எல்லப்பாவிற்கு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 12 ஆண்டு சிறை தண்டணையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கடத்தல் குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
Tags:    

Similar News