செய்திகள்
கைது

மறைமலைநகர் அருகே கடைக்காரரிடம் பணம் பறிப்பு- 2 வாலிபர்கள் கைது

Published On 2021-01-26 12:34 GMT   |   Update On 2021-01-26 12:34 GMT
மறைமலைநகர் அருகே கடைக்காரரிடம் கத்திமுனையில் பணம் பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 45). இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது பெட்டி கடைக்கு வந்த 2 வாலிபர்கள் இளங்கோவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து இளங்கோ மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த தீனா (29), பொத்தேரி பகுதியை சேர்ந்த சூர்யா (23), ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News