செய்திகள்
மானாமதுரையில் தலைக்கவசம் அணிந்து போலீசார் விழிப்புணர்வு
மானாமதுரையில் போலீசார் தலைக்கவசம் அணிந்து வாகன ஊர்வலம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மானாமதுரை:
போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மானாமதுரையில் போலீசார் தலைக்கவசம் அணிந்து வாகன ஊர்வலம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த வாகன ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், அர்ச்சுணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அவசியம் என்றும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகன ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக நடந்தது.