செய்திகள்
ராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
ராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவுதம் விஜய், அருண் குமார் ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் அம்பலபுளி பஜார், மீனாட்சி தியேட்டர் அருகே மற்றும் பூபால்பட்டி தெரு பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற பூபால்பட்டி தெரு சுரேஷ்குமார் (வயது 49), எஸ்.பெருமாள் (60), வி. பெருமாள் (65) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.