செய்திகள்
விபத்து பலி

ஆலங்குளம் அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2021-01-19 10:29 GMT   |   Update On 2021-01-19 10:29 GMT
ஆலங்குளம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 28). இவர் சம்பவத்தன்று சுண்டங்குளத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோடு பகுதிக்கு வந்து கொண்டு இருந்தார். ஆலங்குளம் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது சின்னக்காமன்பட்டியை சேர்ந்த மாரிச்சாமி என்பவர் வந்த சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கருப்பசாமி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் சப் - இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வழக்குப்பதிவு செய்து டிரைவர் மாரிச்சாமியை கைது செய்தனர்.
Tags:    

Similar News