செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

Published On 2021-01-19 07:14 GMT   |   Update On 2021-01-19 07:14 GMT
மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் அஜய் (வயது 19). பெயிண்டரான இவர், தனது உறவினர் பிரபு என்பவருடன் சேர்ந்து கடந்த ஒரு வாரமாக குரோம்பேட்டை, துர்கா நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை வீட்டின் வெளிப்புற சுவரில் பெயிண்ட் அடித்தபோது, அருகில் இருந்த உயரழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக அவரது கை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அஜய், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான அஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News