செய்திகள்
விபத்து

சரக்கு வாகனம் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி

Published On 2021-01-17 11:14 GMT   |   Update On 2021-01-17 11:14 GMT
சாத்தூரில் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பங்களா தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் மாவட்ட குற்றவியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவர் கீழே விழுந்தார்.

இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு காவல்துறை சார்பில் முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

Similar News